முதியவருக்கு கொலை மிரட்டல் வாலிபர் மீது வழக்கு.

67பார்த்தது
முதியவருக்கு கொலை மிரட்டல் வாலிபர் மீது வழக்கு.
ஆரல்வாய்மொழி வடக்கூர் அகலிகை ஊற்று தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 67). இவர் கறவை மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே உள்ள குளத்தின் கரையில் வடக்கூர் கீழத்தெருவை சேர்ந்த இசக்கியப்பன் மகன் மீனாட்சிசுந்தரம் என்கிற கணேஷ் (25) அமர்ந்து மது குடித்தார். இதை சண்முகம் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த கணேஷ், சண்முகத்தின் வீட்டின் முன்பு நின்ற இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தார். இதுகுறித்து சண்முகம் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கணேஷ் மீது போலீசார் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி