அங்கன்வாடி மையக் கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி

61பார்த்தது
தண்டரை ஊராட்சியில்
புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டிடம் திறப்பு விழா நிகழ்ச்சி செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு. பாபு ரிப்பன் வெட்டி திறந்து
வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியம் தண்டரை
ஊராட்சியில்
புதிய நியாய விலை கடை கட்டிடம், புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.

அதன்படி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 11 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன் திறப்பு விழா நிகழ்ச்சி ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி முனுசாமி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக செய்யூர் தொகுதி எம்எல்ஏ பனையூர் மு. பாபு அவர்கள் தலைமை தாங்கி புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் அணிகளின் அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி