தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து

82பார்த்தது
சாலையோரம் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது அதி வேகமாக வந்த அரசு பேருந்து மோதி விபத்து.

25 பேர் சிறு காய்களுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி.


செங்கல்பட்டு மாவட்டம் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் சொகுசு பேருந்து தஞ்சாவூரில் இருந்து 40 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது அப்போது ஊரப்பாக்கம் அருகே வந்தபோது பயணிகளை இறக்கி விடுவதற்காக சாலையின் இடதுபுறம் ஓரம் கட்டி நின்று கொண்டிருந்தது
அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து அதிவேகமாக வந்து முன்னால் நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பின்னால் மோதி விபத்துக்குள்ளானது

அப்போது அரசு பேருந்தில் பயணம் செய்த 25 நபர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

உடனடியாக அக்கப் பக்கத்தினர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அரசு பேருந்து ஓட்டுனர் திருநாவுக்கரசு வயது 32 என்பது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி