பாஜக உறுப்பினர் அட்டை வழங்கிய மத்திய நிதி அமைச்சர்

52பார்த்தது
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கொட்டிவாக்கம் கடற்கரை பகுதியில் சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று (செப். 22 ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி உறுப்பினர் அட்டை வழங்கினார். அப்போது பேசிய அவர் சாலையோர வியாபாரிகள் மற்றும் மீன் விற்பவர்கள் பாரத பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் வங்கியில் கடன் பெறலாம் என்றும், வங்கி தர மறுத்ததால் என்னிடம் கூறுங்கள் என்று பேசினார்.

மேலும் பாஜக தான் நாட்டில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்றும், இதில் யார் வேண்டுமானாலும் உயர்ந்த பொறுப்புக்கு வரலாம் என்று கூறினார். நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் எஸ். ஜி. சூர்யா, கராத்தே தியாகராஜன், கே. டி. ராகவன், மாவட்ட தலைவர் சாய் சத்யன், கவுன்சிலர் லியோ சுந்தரம், மீனவர் அணி நிர்வாகி நீலாங்கரை முனுசாமி, மண்டல் தலைவர் அசோக்குமார், மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் டாக்டர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.