பிரசாரத்திற்கு ஆர்வம் காட்டாத சுயேச்சை வேட்பாளர்கள்

60பார்த்தது
பிரசாரத்திற்கு ஆர்வம் காட்டாத சுயேச்சை வேட்பாளர்கள்
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், அ. தி. மு. க. , - - தி. மு. க. , - -பா. ம. க. , உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள், ஐந்து பேரும், சுயேச்சையாக 6 பேரும் என, 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

அ. தி. மு. க. , வேட்பாளர் ராஜசேகர், தி. மு. க. , வேட்பாளர் செல்வம், பா. ம. க. , வேட்பாளர் ஜோதி, நாம் தமிழர் வேட்பாளர் சந்தோஷ்குமார் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேட்பாளர்களை ஆதரித்து கட்சயின் பிரமுகர்கள் வந்தபடி உள்ளனர். கிராமம், நகரம், ஒன்றிய அளவில், தினமும் காலை முதல் இரவு வரை தீவிரமாக பிரசாரம் செய்து ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

ஆனால், சுயேச்சை வேட்பாளர்களை பலரும், எந்த பகுதியிலும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவதை பார்க்க முடியவில்லை.

துண்டு பிரசுரம் அச்சடித்து, வாக்காளர்களிடம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபடுவர் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிரசாரத்திற்கு பலரும் ஆர்வம் காட்டாமல் உள்ளனர். சுயேச்சை வேட்பாளர்கள், தேர்தல் பிரசாரத்திற்கு எந்த செலவும் மேற்கொள்ளவில்லை என்றும் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.

சுயேச்சை வேட்பாளர்களின் வாக்குறுதி, தொகுதி பிரச்னைகள் பற்றி அவர்களின் பார்வை, வேட்பாளரின் பிரசாரம் ஆகியவற்றை பார்க்க வாக்காளர்கள் பலரும் ஆர்வத்துடன் உள்ள நிலையில், எந்த பகுதியிலும் சுயேச்சை வேட்பாளர்களை பார்க்க முடியவில்லை என்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you