தரமில்லாத இலவச மிதிவண்டிகள் விவகாரம்- தமிழ்நாடு அரசு மறுப்பு

73பார்த்தது
தரமில்லாத இலவச மிதிவண்டிகள் விவகாரம்- தமிழ்நாடு அரசு மறுப்பு
மாணவர்களுக்கு தரமில்லாத இலவச மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளில் வெளிவந்த செய்திகளை தமிழ்நாடு அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. கழக அரசு பொறுப்பேற்று, கடந்த 3 ஆண்டுகளாக 16,73,374 தரமான மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவ மாணவியருக்கு தரமான மிதிவண்டிகள் வழங்கப்படுகின்றது. எனவே பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி