அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளேன் - எலான் மஸ்க்

155பார்த்தது
அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளேன் - எலான் மஸ்க்
நியூயார்க்கில் பிரதமர் மோடியை சந்தித்த பிறகு டெஸ்லா மற்றும் ட்விட்டர் நிறுவனங்களின் உரிமையாளராக எலான் மஸ்க் கூறுகையில், "அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளேன். டெஸ்லா இந்தியாவில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். கூடிய விரைவில் அதைச் செய்வோம். பிரதமர் மோடியின் ஆதரவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன், எதிர்காலத்தில் எங்களால் ஏதாவது அறிவிக்க முடியும் என்று நம்புகிறேன். இந்தியாவில் கணிசமான முதலீடு இருக்கும் என்று தெரிகிறது. இது பிரதமருடனான சிறந்த உரையாடலாக இருந்தது” என்றார்.