தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழகம் மற்றும் கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. இரண்டு மாநிலங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தமிழகத்திற்கு ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஆனால், கேரளாவுக்கான ரெட் அலர்ட் தொடர்கிறது. இந்த நிலையில் கொச்சியில் இருக்கும் ஐடி நிறுவனங்களுக்குள் மழை நீர் புகுந்த காட்சிகள் வெளியாகி இருக்கிறது. கூரைகளை பிய்த்துக் கொண்டு மழை நீர் உள்ளே வரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.