வெப்ப அலை இனி பேரிடராக கருதப்படும் - தமிழக அரசு

66பார்த்தது
வெப்ப அலை இனி பேரிடராக கருதப்படும் - தமிழக அரசு
பருவநிலை மாற்றத்தால் தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு வெப்ப அலை வீசி வருகிறது. வெப்ப அலையால் தமிழகத்தில் வேலை பார்த்த வட இந்திய கூலித் தொழிலாளி ஒருவர் மரணம் அடைந்திருக்கிறார். இந்த நிலையில் தற்போது மாநில பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளின் படி வெப்ப அலை பேரிடராக அறிவிக்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். வெப்ப அலையை தடுக்கவும், உரிய நிவாரணம் வழங்கவும் வெப்ப அலை இனி மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும் எனக் கூறினார்.