பெண்களை சிறைப்பிடித்த ஹமாஸ் பயங்கரவாதிகள்

477பார்த்தது
ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நகருக்குள் நுழைந்து கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். கண்ணில்பட்ட ஏராளமான பொதுமக்களை கொடூரமாக சுட்டுக் கொன்றனர். பின்னர், பல பெண்களையும், குழந்தைகளையும் சிறைபிடித்து தங்கள் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றனர். இந்நிலையில் இஸ்ரேலிய பெண்கள் காசா பகுதியில் அடையாளம் தெரியாத இடத்தில் சிறைபிடிக்கப்பட்டுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. போர் நடந்து வரும் சூழலால் துப்பாக்கி, குண்டு சத்தங்களை கேட்டு சிறைபிடிக்கப்பட்டுள்ள அப்பெண்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.