குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பல்

76பார்த்தது
குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கும் கும்பல்
திருப்போரூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக செவ்வாய் மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கூட்டம் அலைமோதும். கோயில் உள்பட சுற்றுவட்டார பகுதிகளில், குழந்தைகளை ஒரு நாடோடி கும்பல் பிச்சை எடுக்க வைத்து சம்பாதித்து வருகிறது. இவற்றை தடுக்க போலீசார் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.