நாத்தனார் மகனுடன் உல்லாசம்: பெண் கழுத்தை அறுத்து கொலை

82பார்த்தது
நாத்தனார் மகனுடன் உல்லாசம்: பெண் கழுத்தை அறுத்து கொலை
கிருஷ்ணகிரி: சின்னமுத்தூர் அருகே மேட்டு கொல்ல கொட்டாயைச் சேர்ந்தவர் பழனி (40), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சத்யா (36). இவர்களுக்கு திருப்பதி (18), கேசவன் (16) என்ற 2 மகன்கள் உள்ளனர். பழனியின் அக்காள் மகன் தர்மபுரியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (25). இவர் பேக்கரியில் வேலை செய்துகொண்டு பழனியின் வீட்டில் தங்கியிருந்தார். அவருக்கும், சத்யாவிற்கும் இடையே கள்ளக்காதல் இருந்துள்ளது. இதையறிந்த பழனி மற்றும் அவருடைய மகன்கள், சத்யாவை கண்டித்தனர். ஆனாலும் சத்யா கள்ளக்காதலை கைவிடவில்லை.

இந்த நிலையில், நேற்று காலை கட்டிலில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சத்யா சடலமாக கிடந்தார். அருகில் மாரியப்பன் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். பழனியும், அவரது மகன்களும் வீட்டில் இல்லாத நேரத்தில் மாரியப்பன் சத்யாவுடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது வீட்டுக்கு வந்த சத்யாவின் மகன்களோ, கணவனோ அவரை கொலை செய்து விட்டு ள்ளக்காதலனின் கழுத்தை அறுத்தார்களா? அல்லது மாரியப்பன் சத்யாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தாரா? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.