சொத்து வரி பெயர் மாற்றத்திற்காண கட்டணத்தை 20 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக வந்த செய்திக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். நல்ல அரசு என்பது மக்களின் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்வதாக, அரசின் நடைமுறைகள் குறைந்த கட்டணத்தில், எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். எனவே கட்டணம் உயர்த்தும் முடிவை இந்த அரசு கைவிட வேண்டும் எனவும் அவர் தனது எக்ஸ் தள பதிவில் வலியுறுத்தியுள்ளார்.