திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத்தையொட்டி ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்தும், நடனமாடியும் விழாவில் கலந்து கொண்டனர். இந்நிலையில் தைப்பூசத்தை முன்னிட்டு தமிழக பா. ஜ. க தலைவர் அண்ணாமலை காவடி எடுத்துபழனியாண்டவரை தரிசனம் செய்தார்.
48 நாள் விரதத்தை நிறைவு செய்யும் விதமாக தற்போது பழநி முருகன் கோவிலில் காவடி சுமந்து சென்று வழிபாடு நடந்துகிறார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை.
அண்ணா பல்கலை. வழக்கு விவகாரத்தில் ஆட்சியாளர்களை கண்டிக்கும் விதமாக தனக்குத்தானே சாட்டையடி கொடுத்து விரதம் தொடங்கி இருந்தார் அண்ணாமலை
அறுபடை வீடுகளுக்கும் சென்று வழிபாடு நடத்துவேன் என்று அண்ணாமலை கூறியிருந்த நிலையில் முதல் படைவீடாக இன்று பழநி திருக்கோவிலுக்கு காவடி சுமந்து சென்றுள்ளார் அண்ணாமலை