தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்

53பார்த்தது
நத்தம் அருகே ஊராளிபட்டி ஊராட்சியில் தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்- கிராமங்களில் கருப்புக் கொடி காட்டி தரையில் அமர்ந்து போராட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஊராளிபட்டி ஊராட்சியில் உள்ள சீரகம்பட்டியில் கடந்த 20 ஆண்டுகளாக எந்த விதமான அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி 300க்கும் மேற்பட்டோர் வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணித்து ஊர் மந்தையில் உள்ள கோயில் அருகே தரையில் அமர்ந்து கோஷங்கள் எழுப்பி இதனால் பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.

போராட்ட நடைபெற இடத்திற்கு வந்த நத்தம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்த முயற்சி செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் ஆண், பெண் என 455 வாக்காளர்கள் உள்ளார்கள் என்பது குறிபிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி