திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே 102 வயது மூதாட்டி ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்றினார்.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு பதிவு காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ராமலிங்கம் பட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள் வயது 102. இவர் வயதான காலத்திலும் தனது ஜனநாயக கடமை ஆற்றுவதற்காக வெள்ளிக்கிழமை காலை 7. 30 மணியளவில் குச்சியை ஊன்றி நடந்து வாக்குச் சாவடிக்கு வருகை தந்தார். பின்னர் வரிசையில் நின்று ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.