பாலக்கோடு: வாரச்சந்தையில் 18 லட்சத்திற்கு தேங்காய் விற்பனை

77பார்த்தது
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாட்களில் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற தேங்காய் விற்பனைக்கு என்று பிரத்தேகமான வார சந்தை நடைபெற்று வருவது வழக்கம். நேற்று அக்டோபர் 14 நேற்று நடைபெற்ற வார சந்தையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கிருஷ்ணகிரி, நாமக்கல், வேலூர், திருவண்ணாமலை, உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். மேலும் சந்தையில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தேங்காய் அளவை பொறுத்து 8 முதல் 20வரை பல்வேறு ரகங்களில் விற்பனை நடந்தது. நேற்று 18 லட்சத்திற்கு தேங்காய் வர்த்தகம் நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும், தேங்காய் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you