இந்திய ராணுவத்தை காங்கிரஸ் பலவீனப்படுத்த பார்க்கிறது என பிரதமர் நரேந்திர மோடி பரபரப்பு குற்றச்சாட்டு. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் மீதான விவாதத்தில் உரையாற்றிய மோடி, "நேற்று ராகுல் காந்தி இந்துக்களின் மனதை புண்படுத்தினார். இந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது. கடவுள்கள் வழிபாடு நடத்த மட்டுமே, அரசியல் செய்ய அல்ல. இந்துக்களை அவமதிப்பதை காங்கிரஸ் ஃபேஷனாக கருதுகிறது" என கடுமையாக விமர்சித்துள்ளார்.