ஜே. ஆர். டி குழும தலைவர் ஜே. ராஜேந்திரன் வாக்கு பதிவு

73பார்த்தது
100 சதவீதம் வாக்கு பதிவினை அனைவரும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும் -ஜே. ஆர். டி குழும தலைவர் ஜே. ராஜேந்திரன் பேட்டி

கோவையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. முதல் கட்டமாக 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அந்தவகையில், அதிகாலையிலேயே ஜனநாயக கடமையாற்ற பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்தி வருகின்றனர். அதனையொட்டி பல்வேறு அமைப்பினர், கட்சியினர், பிரபலங்கள், அவர்களது வாக்குரிமைகளை பயன்படுத்திக்கொண்டனர்.
இந்நிலையில், கோவையில் தொழிலதிபர் மற்றும் ஜே. ஆர். டி குழுமத்தின் தலைவர் ஜே. ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை இன்று காலை கோவைபுத்தூரில் உள்ள ஆஸ்ரமம் உயர்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியார்களை சந்தித்து பேசினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி