ஆட்சியர் கிராந்தி குமார் ஓட்டு போட்டார்

65பார்த்தது
இன்று வெள்ளிக்கிழமை காலை 7 மணியளவில் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி வளாகத்தில்
மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினார்.

பிறகு செய்தியாளர்கள் பேசும் போது

கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் எந்தவித தடங்களும் இன்றி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா குறித்த கேள்விக்கு, கண்காணிப்பு குழு மூலமாக அனைத்து வங்கி பண பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

ஜி பே எனப்படும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனையில், அதிகமாக பண பரிவர்த்தனை எந்த கணக்கில் இருந்து பகிரப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி