மாற்றுத்திறனாளிகள் உடனான சந்திப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது தள பக்கத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்திட, “உள்ளாட்சி மன்றங்களில் நியமன முறையில், உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும்” என நேற்று அறிவித்தேன்! இன்று, மாற்றுத்திறன் கொண்ட தோழர்கள் என்னை அரவணைத்து – கைகளை இறுகப்பற்றிக் கொண்டு, “நன்றி” என்றபோது, என் பிறந்தநாள் பரிசைப் பெற்றதாக உணர்ந்தேன்!" என்று பதிவிட்டுள்ளார்.