பெரம்பூர் - Perambur

சென்னை: மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

சென்னை: மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

சென்னை ஜாம்பஜார் பகுதியில் 80 வயது மூதாட்டி வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு தனியாக வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே மூதாட்டியின் மகன் நேற்று காலை தனது தாயை பார்க்க வீட்டிற்கு வந்த போது, அவரது தாய் படுக்கை அறையில் உடலில் ரத்த காயங்களுடன் ஆடைகள் கலைந்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கிடந்தார்.  இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகன் உடனே தனது தாயை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார். பின்னர் சம்பவம் குறித்து ஜாம்பஜார் போலீசார் விசாரணை நடத்திய போது, மூதாட்டி நேற்று முன்தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த போது, அதே பகுதியை சேர்ந்த போதை ஆசாமியான நாகராஜ் என்பவர் மூதாட்டி தனியாக இருப்பதை அறிந்து அவரது வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்து, மூதாட்டியை பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.  இந்த சம்பவத்தில் மூதாட்டிக்கு உடல் முழுவதும் ரத்த காயங்கள் ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, போலீசார் மூதாட்டிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நாகராஜ் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

சென்னை
அமலாக்கத்துறை சோதனை: என். ஆர். இளங்கோ குற்றச்சாட்டு
Apr 08, 2025, 00:04 IST/இராயபுரம்
இராயபுரம்

அமலாக்கத்துறை சோதனை: என். ஆர். இளங்கோ குற்றச்சாட்டு

Apr 08, 2025, 00:04 IST
அமலாக்கத்துறை சோதனை மூலம் திமுக மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ தெரிவித்துள்ளார்.  அமைச்சர் கே.என். நேரு வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக எம்.பி. என்.ஆர். இளங்கோ; அரசியல் உள்நோக்கத்துடன் தமிழ்நாட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. சிறுபான்மையினர் மக்களுக்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குரல் கொடுப்பது ஒன்றிய அரசால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரத்தில் முதலமைச்சரின் நடவடிக்கையை ஒன்றிய அரசால் எதிர்கொள்ள முடியவில்லை. முதலமைச்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க முடியாமல், அமலாக்கத்துறையை ஒன்றிய அரசு ஏவிவிடுகிறது.  அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மூலம் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குழப்பத்தை ஏற்படுத்த ஒன்றிய பா.ஜ.க. முயற்சி செய்கிறது. ஒன்றிய அரசின் நடவடிக்கை ஹிட்லரின் சர்வாதிகார போக்கு போன்று உள்ளது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் குழப்பம் உண்டாக்க அமலாக்கத்துறையை ஏவிவிடுவார்கள். ஒன்றிய அரசின் பழிவாங்கும் போக்கை சட்டரீதியாக திமுக எதிர்கொள்ளும் என்று கூறினார்.