பெரம்பூர் - Perambur

ரயில் நிலையத்தில் திடீர் சோதனையால் பரபரப்பு

ரயில் நிலையத்தில் திடீர் சோதனையால் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாருடன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாரும் இணைந்து, இன்று (செப். 16) திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வழியாக பல்வேறு இடங்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக தமிழக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ராகவி, ரயில்வே காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார், சென்ட்ரல் ரயில்வே போலீஸார், ஆர். பி. எஃப் போலீஸார் ஆகியோர் இணைந்து, போதைப்பொருள் தொடர்பாக திங்கள்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். வெளிமாநிலங்களில் இருந்து சென்ட்ரலுக்கு வந்தடைந்த ரயில் மற்றும் ரயில் நிலையத்தின் நடைமேடை, காத்திருபோர் அறையில் அமர்ந்திருந்த பயணிகளின் உடமைகள், பார்சல்கள் ஆகியவற்றை மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சோதனை செய்தனர். இதைத் தொடர்ந்து நிருபர்களிடம் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு துணை கண்காணிப்பாளர் ராகவி கூறுகையில், “வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதாக ரகசிய தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சோதனை நடைபெற்றது.

வீடியோஸ்


சென்னை
பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப பதிவு தொடக்கம்
Sep 16, 2024, 15:09 IST/சைதாபேட்டை
சைதாபேட்டை

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப பதிவு தொடக்கம்

Sep 16, 2024, 15:09 IST
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வியியல் கல்லூரியில் உள்ள 2040 இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று(செப்.16) முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (B. Ed. ) 2024 - 2025ஆம் கல்வி ஆண்டின் முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை www. tngasa. in என்ற இணையதள முகவரியில் இன்று முதல் செப்டம்பர் 26ஆம் தேதி வரையில் பதிவு செய்யலாம். விண்ணப்பம் பதிவு செய்ய கட்டணமாக ரூ. 500 செலுத்தப்பட வேண்டும். SC மற்றும் ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணம் ரூ. 250 மட்டும் செலுத்தினால் போதுமானது. மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தேர்வு செய்தல் வேண்டும். மேலும் கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில் என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை போன்ற விவரங்களை www. tngasa. in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் இணையதளம் மூலமாகவே செலுத்தலாம். மேலும் இது குறித்த சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின், 044 – 24343106 மற்றும் 044 -24342911 என்ற எண்களில் தொடர்பு கொண்டு, உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.