பெரம்பூர் - Perambur

கல்லாவில் கைவைத்த பணியாளர்: காட்டி கொடுத்த சிசிடிவி கேமரா

கல்லாவில் கைவைத்த பணியாளர்: காட்டி கொடுத்த சிசிடிவி கேமரா

மாதவரம் மண்ணடி தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 50. கடந்த 12 ஆண்டுகளாக பெரம்பூரில் உள்ள ஸ்ரீ ராமானுஜா அறக்கட்டளை நடத்தி வருகிறார்.உடல்நிலை சரியில்லாத நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அறக்கட்டளை நிர்வாகத்தை நிர்வகிக்க, பெரவள்ளூரை சேர்ந்த ஹரிஷ் என்பவரை வேலைக்கு அமர்த்தினார். இந்நிலையில் ஹரிஷ் வேலைக்கு சேர்ந்த பின், அறக்கட்டளையில் இருந்து பணம் காணாமல் போய் கொண்டிருந்தது. அலுவலகத்தில் ரகசிய கேமரா வைத்து கண்காணித்ததில், ஹரிஷ் கல்லா பெட்டியில் இருந்து பணத்தை திருடுவது தெரிந்தது. இதுகுறித்து ஹரிடம் கேட்ட போது, அவர் பணத்தை எடுத்ததை ஒப்புக் கொண்டார். இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் சரவணன் புகார் அளித்தார். இதுவரை மொத்தம் 3. 60 லட்சம் ரூபாயை ஹரிஷ் திருடியது தெரிந்தது. புகாரின்படி, ஹரிைஷ போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

வீடியோஸ்


சென்னை