ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற சவுக்கு சங்கர்!

54பார்த்தது
ஜாமீன் மனுவை வாபஸ் பெற்ற சவுக்கு சங்கர்!
கஞ்சா வைத்திருந்ததாக கைதான வழக்கில் ஜாமீன் மனுவை சவுக்கு சங்கர் வாபஸ் பெற்றார். தேனியில் அவர், தனது உதவியாளர் மற்றும் டிரைவருடன் தங்கியிருந்த விடுதியில் கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் இதுவரை அவர் 2 முறை மதுரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான நிலையில் ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுள்ளார். சவுக்கு சங்கர் தற்போது கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி