லாரி மீது கார் மோதி விபத்து.. 6 பேர் பலி

17915பார்த்தது
லாரி மீது கார் மோதி விபத்து.. 6 பேர் பலி
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் பயங்கர விபத்து நடந்தது. திங்கள்கிழமை(மே 13) இரவு லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதில் கார் அப்பளமாக நொறுங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காரில் இருந்து சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். நெடுஞ்சாலையில் அல்லாபக்ஷ்பூர் சுங்கச்சாவடி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து டிவைடரை கடந்து மறுபுறம் சென்று எதிரே வந்த லாரி மீது மோதியது.