BREAKING: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

84308பார்த்தது
BREAKING: அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி விசாலாட்சிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2006 - 2011 திமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி மதிப்பில் 64.90% அளவுக்கு சொத்து சேர்த்தது நிரூபணம் செய்யப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில், பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறையும், அவரது மனைவிக்கு 3 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பொன்முடி வழக்கு காரணமாக நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி