'கோவையில் மதவெறியை தூண்ட பாஜக திட்டம்'

61பார்த்தது
'கோவையில் மதவெறியை தூண்ட பாஜக திட்டம்'
தோல்வி பயத்தில் இடையூறு செய்ய பாஜக வேட்பாளர் திட்டமிட்டுள்ளதாக கோவை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கணபதி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர், பாஜக வேட்பாளர் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதைக்கண்டித்த திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரை பாஜகவினர் தாக்கியுள்ளனர். அண்ணாமலையின் விதிமீறல் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஆதாரத்தோடு புகார் அளித்தும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. அமைதியான கோவையில் அதிகாரத்தை கட்டவிழ்த்துவிட்டு, மதவெறியை தூண்டிவிட்டு வெற்றி பெற்றுவிடலாம் என பாஜகவினர் நினைக்கின்றனர் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி