ஊருக்குள் புகுந்த கரடி: பீதியில் இருக்கும் மக்கள்

50பார்த்தது
ஊருக்குள் புகுந்த கரடி: பீதியில் இருக்கும் மக்கள்
கொடைக்கானலில் உள்ள மலைகிராமங்களில் பெரும்பாலான வனப்பகுதிகளில் காட்டு எருமை, மான், பன்றி, சிறுத்தை, யானை, கரடி உள்ளிட்ட விலங்குகள் அதிக அளவில் உலா வருகிறது. மன்னவனூர் கிராமப்பகுதியில் விவசாய நிலங்களில் புகுந்து காட்டு பன்றிகள் சேதப்படுத்திய நிலையில் தற்போது கரடி ஒன்று உணவு தேடி ஊருக்குள் உலாவருவது மக்களை அச்சமடைய செய்துள்ளது. வனத்துறையினர் கரடியை கண்காணித்து வனப்பகுதியில் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி