அந்தரங்க உறுப்பில் அடித்து சிறுநீர் கழித்து அட்டூழியம்.. (வீடியோ)

32347பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் பட்டியலின இளைஞரை ஒரு கும்பல் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளது. பிஜ்ராத் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சமேலோவில் உள்ள கடலா கிராமத்தில் பட்டியலின இளைஞரை சிலர் பிணைக் கைதியாக பிடித்து வைத்தனர். அவரை தாக்கி, முடியை வெட்டியெடுத்து தாக்கியுள்ளனர். மேலும் அந்த இளைஞர் மீது 'பரியேறும் பெருமாள்' பட பாணியில் சிறுநீர் கழித்து அட்டூழியம் செய்துள்ளனர். அதோடு நிற்காமால் மரக்குச்சியால் அந்தரங்கப் பகுதிகளில் குத்தி காயப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.