பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் - ஒருவர் கைது

77பார்த்தது
பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் - ஒருவர் கைது
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பெண் DSP காயத்ரி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநர் கொலையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களிடம் பெண் DSP பேச்சுவார்த்தை நடத்திய போது இச்சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், DSP மீது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நெல்லிகுளத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.