புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்

98609பார்த்தது
புதிய தேர்தல் ஆணையர்கள் நியமனம்
மத்திய தேர்தல் ஆணையத்தில் இரண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான குழு, ஐஏஎஸ் அதிகாரிகளான ஞானேஷ்குமார் மற்றும் எஸ்.எஸ்.சாந்து ஆகியோரை புதிய தேர்தல் ஆணையர்களாக நியமனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையர்கள் தேர்வு முறை ஒருதலைபட்சமாக நடந்ததாக எதிர்க்கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றஞ்சாட்டியுள்ளார். புதிய தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால் விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.