தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை 4 மாதங்கள் லண்டனில் தங்கி படித்தபடியே தலைவர் பணிகளை கவனிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. 12 அரசியல் தலைவர்களை படிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் அழைத்துள்ளது. அதில் அண்ணாமலையும் ஒருவர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் செப்.2-ல் இதற்கான வகுப்புகள் தொடங்க உள்ளதால் அண்ணாமலை ஒரு வாரத்துக்கு முன்பு லண்டன் செல்ல உள்ளார். மேலும், அங்கிருந்து அரசியல் பணியை தொடர்வார் என தகவல்கல் வெளி வந்துள்ளன.