தமிழகத்தில் வெயிலுக்கு 80 வயது தையல் தொழிலாளி பலி

81பார்த்தது
தமிழகத்தில் வெயிலுக்கு 80 வயது தையல் தொழிலாளி பலி
சிவகங்கை: காரைக்குடி பாரதிநகர் ஐந்தாவது தெருவுக்கு நேற்று (மே 30) வீதி வீதியாக தையல் மிஷின் எடுத்துச் சென்று தைத்துக் கொடுக்கும் தொழிலாளியான இருதயராஜ் (80) சென்றுள்ளார். காரைக்குடி பகுதியில் கடும் வெயில் அடித்த நிலையில் அங்குள்ள ஒரு ஓரத்தில் தனது தையல் மிஷினை நிறுத்திவிட்டு எதிரில் இருந்த வீட்டுப் படிக்கட்டில் அமர்ந்தவர் அப்படியே வெயில் தாளாமல் இறந்து விட்டார். இது குறித்து அப்பகுதி மக்கள் அவரது குடும்பத்தினரிடம் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அவரது குடும்பத்தினர் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். வெயிலுக்கு தையல் தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி