சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் Kristalina Georgieva கிறிஸ்டலினா ஜார்ஜியாவா, வளரும் நாடுகளில் கிட்டத்தட்ட 60 சதவீத வேலைகளில் செயற்கை நுண்ணறிவால்
வேலை பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாக நம்புகிறார். உற்பத்தித்திறனை கணிசமாக அதிகரிக்கவும், உலகளாவிய வளர்ச்சிக்கு பங்களிக்கவும் வாய்ப்புகள் உள்ளன என்றாலும், சில வகையான வேலைகள் முற்றிலுமாக மறைந்து போக வாய்ப்புள்ளது என்றார். 'உலக நிதி மன்றத்தின் ஆண்டு மாநாட்டிற்கு' செல்வதற்கு முன் அவர் ஒரு பேட்டியில் கூறினார்.