13 பச்சைக் கிளிகளை வலைவிரித்து பிடித்த 3 பேர் கைது

61பார்த்தது
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி வனசரகத்திற்கு உட்பட்ட வட்டக்கோட்டை அருகே வயல் வெளிகளில் வலைகளை விரித்து வியாபார நோக்கில் 13 பச்சைக் கிளிகளை பிடித்து வைத்திருந்த மூன்று பேரை வனத்துறையினர் நேற்று கைது செய்தனர். அவர்களுக்கு தலா ரூ.12,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
பிடிக்கப்பட்ட பச்சைக் கிளிகள் பொய்கை அணையில் விடப்பட்டது. மேலும் பச்சைக் கிளிகளை வியாபார நோக்கில் கடைகளில் பதுக்கி வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வன அலுவலர் இளையராஜா எச்சரித்துள்ளார்.