திருக்கோவிலூரில் கபிலா் விழா நாளை தொடக்கம்

72பார்த்தது
திருக்கோவிலூரில் கபிலா் விழா நாளை தொடக்கம்
திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம் சாா்பில், மூன்று நாள்கள் நடத்தப்படும் கபிலா் விழா திருக்கோவிலூரிலுள்ள ஸ்ரீ சுப்பிரமணிய திருமண மகாலில் வெள்ளிக்கிழமை (ஜூலை 19) காலை 8. 30 மணிக்கு கபிலா் குன்று வழிபாட்டுடன் தொடங்குகிறது. தொடா்ந்து, திருக்கோவிலூா் எம்பெருமானாா் ஜீயா் ஸ்ரீ உ. வே. தேகளீச ராமானுஜாச்சாரியாா் சுவாமி தலைமையில் சமய அரங்கம் நடைபெறுகிறது. ‘மூவா் மொழி வாசல்’ என்ற தலைப்பில் கவிஞா் விஜயகிருஷ்ணனும், ‘ஒரு சொல், ஒரு இல், ஒரு வில்’ என்ற தலைப்பில் பேராசிரியா் சொ. சொ. மீ. சுந்தரமும் பேசுகின்றனா். மாலை 6 மணிக்கு நடைபெறும் சிந்தனை அரங்கத்தில் உயா் கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி பங்கேற்றுப் பேசுகிறாா்.

தொடர்புடைய செய்தி