மகாராஷ்டிர மாநிலம் புல்டானா மாவட்டத்தில் உள்ள மல்காபூர் பகுதியில் திங்கள்கிழமை அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஒரு முதியவர் சாலையில் நடந்து செல்கிறார். அப்போது அந்த வழியாக கார் ஒன்று வேகமாக வந்தது. முதியவர் மீது மின்னல் வேகத்தில் கார் மோதியது. இதனால் முதியவர் கீழே விழுந்தார். பின்னர், கார் டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.