எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வன்னி அரசு கண்டனம்!

82பார்த்தது
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு வன்னி அரசு கண்டனம்!
"மல்லுமேல் பாய்ஸ்" படம் குறித்த விமர்சனத்தில் மலையாளிகளை கேரள பொறுக்கிகள் என விமர்சித்த எழுத்தாளர் ஜெயமோகனுக்கு விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த தனது எக்ஸ் பதிவில், இவரை எழுத்தாளர் என சொல்லுகிறார்கள். ஆனால், ஒரு தேசிய இனத்தை அதாவது, மலையாள தேசிய இனத்தவரை பொறுக்கிகள் என சொல்லுகிறார். கலை, இலக்கியத்துக்கு மொழி அளவுகோல் இல்லை என இவரே பலமுறை சொல்லி விட்டு, இப்போது மலையாள தேசத்தவர் மீது இப்படி வன்மத்தை கொட்டுவது சரியா? தமிழ்நாட்டை தொடர்ந்து அவமதிக்கும் ஆளுனர் ரவி உள்ளிட்ட இந்து தேசியவாதிகளை பொறுக்கிகள் என சொல்ல துணிச்சல் இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி