காங்கேயத்தில் ரூ. 1 1/2 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

68பார்த்தது
காங்கேயம் வேளாண் ஒழுகுமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது. அதில் காங்கேயம் மற்றும் வெள்ளகோயில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 விவசாயிகள் 1. 80 டன் எடையுள்ள 35 தேங்காய் பருப்பு மூட்டைகளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர். அதனை காங்கேயம் சுற்றுவட்டார பகுதியான காங்கேயம் மற்றும் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 4 வியாபாரிகள் தேங்காய் பருப்புகளை ஏலத்தில் எடுத்தனர். குறைந்தபட்ச விலையாக ரூ. 70. 25 அதிகபட்சமாக ரூ. 92. 10க்கும் ஏலம் எடுக்கப்பட்டது 1. 80 டன் எடை உள்ள 35 தேங்காய் பருப்பு மூட்டைகள் ஒரு 1லட்சத்து 53 ஆயிரத்து 658 க்கு ஏலம் எடுக்கப்பட்டது. இந்த தகவலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளர் மாரியப்பன் தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you