திருச்சியில் ரோடு ஷோ நடத்திய அதிமுகவினர்

78பார்த்தது
தமிழகத்தில் வருகிற 19 ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் முதல் கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூட வேண்டும் என சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் கருப்பையா போட்டியிடுகிறார்.


திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கருப்பையா தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு செல்லும் இடமெல்லாம் பொது மக்கள் ஆரத்தி எடுத்து மலர் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.


வரும் புதன்கிழமை மாலை 5 மணி வரை மட்டுமே பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.


இந்த நிலையில் திருச்சியில் அதிமுக வேட்பாளர் கருப்பையா ரோடு‌ ஷோ மூலம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பெரியகடை வீதி, மலைக்கோட்டை, தெப்பக்குளம், வாணப்பட்டறை, மேலப்புலிவார் சாலை, காமராஜர் வளைவு ஆகிய பகுதிகளில் இன்று வேட்பாளர் கருப்பையா திறந்த வெளி வாகனத்தில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

டேக்ஸ் :