நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேல ஏர்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவர் உடல் நலக்குறைவால் நேற்று முன் தினம் இறந்தார். இவர் வசித்த பகுதியில் நேற்று திருமணம் நடந்ததால் அவ்வழியே வேலுவின் உடலை கொண்டு செல்ல அனுமதிகாததால் இரு தரப்பினரும் மோதி கொண்டனர். இது குறித்து அம்பாச முத்திரம் காவல் நிலையத்தில் 15 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் மணிமுத்தாறு போலீசார் இவ்வழக்கு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ராஜா கண்ணன் மாரி ராஜா மற்றும் அருண் பூமாரி ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்