எண்ணூர் போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான்

80பார்த்தது
எண்ணூர் போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான்
எண்ணூர் கோரமண்டல் ஆலைக்கு எதிராக 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து உரையாற்றினார். தங்களின் உயிருக்கும்,  மீன்பிடிதொழிலுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ள ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கக்கோரி 4 நாட்களாக தொடர் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டக் கோரிக்கைகள் வெல்லும் வரை தானும் நாம் தமிழர் கட்சியும் தோளோடு தோளாக களத்தில் துணை நிற்போம் என்றும் உறுதியளித்தார்.