வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் 5008 திருவிளக்கு பூஜை..!

64பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ வடக்கு வாசல் செல்லியம்மன் கோவில் 48 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 12_ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.

6-வது நாள் திருவிழாவான இன்று 5008 பெண்கள் கோவிலை சுற்றிலும் அமர்ந்து திருவிளக்கு ஏற்றி மந்திரங்கள் சொல்லி வழிபட்டனர்.

முக்கிய நிகழ்வான வரும் 20 ஆம் தேதி 5000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது இதனைத் தொடர்ந்து 21-ம் தேதி ஆயிரக்கணக்கானோர் தீக்குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற உள்ளது.

இந்த திருவிளக்கு பூஜையில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

திருவிளக்கு பூஜை முன்னிட்டு விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டினர் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி