ஆந்திர மாநிலம் நெல்லூர் ஆர்எஸ்ஆர் கல்லூரியில் மூத்த மாணவர்களின் அச்சுறுத்தல் காரணமாக மாணவர் தற்கொலை செய்து கொண்டார். ஆனந்தசாகரை சேர்ந்த பிரதீப் இரண்டாம் ஆண்டு இசிஇ படித்து வருகிறார். இந்நிலையில், காவாலி ரயில் நிலையம் அருகே அவர் தற்கொலை செய்து கொண்டார். மூத்த மாணவர்களின் தொல்லையே தற்கொலைக்கு காரணம் என பிரதீப்பின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு கல்லூரி நிர்வாகம் பதில் அளிக்கவில்லை.