தனது காரை மேடையாக்கிய முன்னாள் அமைச்சர்

55பார்த்தது
கள்ளச்சாராய புழக்கத்தை கட்டுப்படுத்தாத தமிழக அரசை கண்டித்து நாகப்பட்டினம் அவுரி திடலில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேடை அமைப்பதற்கு போலீசார் அனுமதிக்காமல் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் தனது காரை நிறுத்தி அதனை மேடையாக்கி அதன் மீது ஏறி நின்று கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுகவினர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர்.