தெலுங்கானா மாநிலம் சாலிம்நகர் மாவட்டம் மண்டலம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (37) தனியார் நிறுவன ஊழியர். இவர் டூவீலரில் குருபரப்பள்ளி அடுத்த பல்லேரிப்பள்ளி- வி. மாதே பள்ளி சாலையில் சம்பவம் அன்று இரவு சென்ற போது டூவீலர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் டூவீலர் ஓட்டி சென்ற மாணிக்கம் படுகாயம் அடைந் தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி மாணிக்கம் உயிரிழந்தார். இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை.