குழித்துறை தரைப்பாலத்தில் சிக்கிய முதியவரை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

1041பார்த்தது
குழித்துறை நீதிமன்றத்திற்கு வருவதற்காக பரக்காணி சிங்காராஜன் (82) என்பவர் இன்று (ஜூன் 10) காலை வெட்டுமணியில் தாமிரபரணி ஆற்று தரைப்பாலத்தை கடந்துள்ளார். அப்போது அவர் தடுப்பு வேலிகளை தாண்டி நடந்து செல்லும் போது தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் சிங்காராஜன் நடக்க முடியாமல் நின்றுள்ளார். தொடர்ந்து அவர் அங்கிருந்த தூணை பிடித்தபடி காப்பாற்றுமாறு குரல் எழுப்பியுள்ளார். தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி அவரை மீட்டனர்.