வீடு தீப்பற்றி எரிந்து செங்கையில் பெண் பலி

1551பார்த்தது
வீடு தீப்பற்றி எரிந்து செங்கையில் பெண் பலி
மலையடிவேண்பாக்கம், மலையக்காரர் தெருவை சேர்ந்தவர் சரவணன், 25. இவர், தன் தாய் மலர், 45, உடன் வசித்து வந்தார்.

சம்பவதினத்தன்று அதிகாலை, வீட்டில் மலர் தனியாக இருந்த போது, வீடு தீப்பற்றி எரிந்தது. இதில் சிக்கி, மலர் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற செங்கல்பட்டு தாலுகா போலீசார், மலர் உடலை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என, போலீசார் கூறினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you