நிர்வாகி திருஉருவ படத்திறப்பு : எடப்பாடி பழனிச்சாமி வருகை

64பார்த்தது
மறைந்த அதிமுக கட்சியின் சித்தாமூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பேரம்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி திருவுருவ படத்திறப்பு விழா. கழக பொது செயலாளரும் முன்னாள் முதவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திருவுருவ படத்தை திறந்து வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தாமூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளராக
பேரம்பாக்கம் கிருஷ்ணமூர்த்தி பதவி வகித்து வந்தார். இவர் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக அதிமுகவின் ஆற்றல் மிக்க செயல்பாடுகளுடன் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக காலமானார்.

இந்நிலையில் அவரது திருஉருவ படத்திறப்பு நிகழ்ச்சி இன்று அவரது இல்லத்தில் நடைபெற்று வரும் நிலையில் கழகப் பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் நேரில் பங்கேற்று அவரது திரு உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து
அவர்களுடைய குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்புடைய செய்தி