வாசுகி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கும்பாபிஷேகம்

85பார்த்தது
சின்னசேலம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் இன்று (21ம் தேதி) நடக்கிறது.

நேற்று முன்தினம் வேதபாராயணம், விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், சக்தி அழைத்தல் வைபவம் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு தம்பதி பூஜை, சோடஷ உபச்சார பூஜை மற்றும் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. மாலை 5. 30 மணிக்கு நவசக்தி அர்ச்சனை நடந்தது. இன்று காலை 11. 30 மணிக்கு வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ராஜகோபுரம் கலசங்கள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிேஷகம் வைபவம் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்ய வைசிய சமூகத்தினர் செய்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி